பொதுவாக எக்சிட் கணிப்புகள் எதிர்க்கட்சிகளின் ஆதரவை குறைத்து மதிப்பிடுவதோடு, மாநில கட்சிகள் மற்றும் இடதுசாரிகட்சிகள் ஆகியோரின் ஆதரவை குறைத்து மதிப்பிட்டு வந்துள்ளன. இன்றைய உ.பி. மாநிலத்தில் பாஜகவிற்கு 55க்கும் கூடுதலான இடங்கள் கிடைக்கும் என்றுகூறுகின்ற கணிப்புகளை என்னவென்று சொல்லுவது? இவ்வாறு கணிப்போரின் கற்பனை வளத்தைபாராட்டலாம்! 2௦௦1 இல் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் முடிவுகள் இழுபறியாக இருக்கும் என்றும்இடது முன்னணி பெரும்பான்மையை இழக்கும் என்றும் கணித்ததை மறக்கலாமா? இறுதியில் 2௦௦1 இல் மேற்குவங்கத்தில் இடது முன்னணி மாபெரும்வெற்றி பெற்று கணிசமான அறுதி பெரும்பான்மையை எட்டியது. ஆளும் கட்சியிடம் மகா தில்லுமுல்லுசெய்வதற்கான திட்டம் இருந்து அதன் பகுதியாக முற்றிலும் உண்மையற்ற கணிப்புகளை வெளியிட்டுஅவர்கள் விரும்புகின்ற முடிவை தேர்தல் முடிவாக காட்டி தங்கள் கருத்துக்கும் நிலைபாட்டிற்கும் தவறான இந்த கணிப்புகளை ஆளும் கட்சி பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்றெல்லாம் யாரும் உறுதி கூற இயலாது.தற்சமயம் நாட்டின் பலபகுதிகளில் நிலவிவரும் சூழலில் தலித்துகளோ முஸ்லிம் மக்களோ இதர சிறுபான்மை மக்களோ பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அதை வெளியில் சொல்லும் வாய்ப்பு மிகக்குறைவு.
- வெங்கடேஷ் ஆத்ரேயா
*********
இந்திய தேர்தல் ஆணையம் மோடி அரசிற்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு மேலோங்கி வரும் வேளையில், தேர்தல் ஆணையர்களில் ஒருவரே அந்தக் குற்றச்சாட்டிற்கு வலுவூட்டும் வகையில் சமீபத்தில் ஒன்றைக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்தியத் தேர்தல் ஆணையர்களில் ஒருவரானஅஷோக் லவாசா, ஆணையக் கூட்டங்களில் தனதுகருத்து, சிறுபான்மைக் கருத்து (ஆinடிசவைல டீயீiniடிn)என்றவகையில் பதிவு செய்யப்படுவதே இல்லை எனவும், அதனால் ஆணையக் கூட்டங்களில் கலந்துகொள்ளப்போவது இல்லை எனவும் கூறியிருக்கிறார்.இதற்கு பதிலளிக்கும் வகையில், தலைமைதேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள்எல்லாரும் ஒரே வார்ப்புக்களாகவும் (கூநஅயீடயவநள)படியாக்கங்களாக (ஊடடிநேள) இருக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். இந்தப் பதில் கருத்து வேறுபாடுகளுக்கு வேண்டுமானால் விளக்கமாக அமையலாம். ஆனால், சிறுபான்மைக் கருத்தை ஏன் பதிவிட முடியாது, ஏன் வெளியிட முடியாது என்பதற்கான காரணத்தை அவர் விளக்கவில்லையே! நீதிபதிகளின் தீர்ப்பு வேறுபட்டதாக இருப்பினும், அவை ஒவ்வொன்றையும் வெளியிடத்தானே செய்கிறார்கள்? இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது, உச்ச நீதி மன்றத்தை விட உயர்ந்ததா என்ன? தேர்தல் ஆணையர்கள் அந்த நீதிபதிகளை விட அந்தஸ்தில் உயர்ந்தவர்களா என்ன?அஷோக் லவாசா, சமய சந்தர்ப்பம் தெரியாமல் சர்ச்சைகளை (ஐடட-வiஅநன ஊடிவேசடிஎநசளநைள) உருவாக்குகிறார் எனவும் அரோரா குற்றம் சாட்டியிருக்கிறார். தேர்தல்கள் நடக்கும் போது, விதி மீறல்களைச் சுட்டிக் காட்டி, அவற்றைச் சரி செய்யும் போது சர்ச்சைகள் உருவானால், குடி முழுகிப் போய் விடுமா என்ன? நாட்டின் பிரதமர் மற்றும் ஆளும் கட்சியின்தலைவர் விதிகளை மீறும் போது ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு, சமய சந்தர்ப்பம் குறித்துப் பேசுவது யாருக்கு உதவி செய்யஎன்பதே, இன்று நம் முன் எழுந்து நிற்கும் மிகப் பெரியகேள்வி. தேர்தல் முடிவுகள் வந்து விட்ட பின்னர், என்னநடக்கும் என்பது எல்லாரும் அறிந்தது தானே?
- இ.எம்.ஜோசப்